கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.
கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
x
கலிங்கராஜபுரம் பகுதியில் பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர் மோகன் என்பவரது வீடு உள்ளது. நேற்றிரவு அங்கு பெய்த கனமழையால், அவரது வீட்டின் உட்பக்க சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், வீட்டின் சமையல் அறை மற்றும் படுக்கை அறை முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், வீட்டிலிருந்தவர்கள் முன்பக்க அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்