மது அருந்தியபோது நண்பர்களுக்குள் தகராறு: கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேர் கைது

விருத்தாசலத்தில், நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மது அருந்தியபோது நண்பர்களுக்குள் தகராறு: கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேர் கைது
x
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அருண்ராஜ். இவர் அண்ணா நகரில் உள்ள நண்பர் முகமது நபிஸ் வீட்டில், நண்பர்கள் மனோஜ், பிரேம்குமார், கலைச்செல்வன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது நண்பருக்குள் ஏற்பட்ட தகராறில் அருண்ராஜின் இடுப்பு பகுதியில் பிரேம்குமார் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அருண்ராஜை தூக்கிக் கொண்டு, சாலையில் போட்டு ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அருண்ராஜை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்துவிட்டு நால்வரும் தலைமறைவாகியுள்ளனர். விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண்ராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரேம்குமார் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், பெண் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால், கத்தியால் குத்தி அருண்ராஜை கொன்றது தெரியவந்துது. பெண்ணுக்காக நண்பரை கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்