பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் - 5 பேர் கைது

காரைக்குடியில், பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் -  5 பேர் கைது
x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிரபல கல்லூரியைச் சேர்ந்த தேவகோட்டை மாணவர் அசோக் கோபிநாத், உணவகம் ஒன்றில் தனது நண்பர்களுக்கு விருந்தளித்துள்ளார். அனைவரும் மது அருந்திவிட்டு வந்த நிலையில், அங்கு கணவனுடன் வந்த இளம்பெண்ணிடம், போதையில் இருந்த மாணவன் ஒருவன் ஆபாச செய்கை மூலம், தலைமுடியை இழுத்து தவறாக நடந்துள்ளான். இதை தட்டிக்கேட்ட நிலையில், 12 பேரும் இளம்பெண்ணின் கணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். உணவகத்தையும் சூறையாடியுள்ளனர். இதனிடையே, உணவகத்துக்கு சாப்பிடச் சென்ற தங்களின் செல்போன் கடையில் தவறி விழுந்து விட்டதாக கூறி, காவல் நிலையத்தில் மாணவர்கள் புகாரளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, போலீசார் அழைப்பின் பேரில், காவல் நிலையம் சென்ற உணவக உரிமையாளர், சிசிடிவி காட்சிகளுடன் நடந்ததை விளக்கியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் 12 பேரில், 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 7 பேரை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்