தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்: கூலி வேலை செய்து கவனிக்கும் சகோதரி

நாகர்கோவிலில் வயதான பெற்றோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சகோதரர்களை, கூலி வேலை செய்து சகோதரி ஒருவர் காப்பாற்றி வருகிறார்.
x
அறுகுவிளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சுப்பையா - சரோஜா தம்பதியிக்கு  முத்துலட்சுமி என்ற மகளும், மூர்த்தி, கிருஷ்ணன் ஆகிய மகன்களும் உள்ளனர். சரோஜாவுக்கு கண் பார்வை இல்லாத நிலையில், மூர்த்தி, கிருஷ்ணன் ஆகியோர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ளனர். இதனால், கூலி வேலைக்கு சென்று தனது தாயார், இரண்டு சகோதரர்களை முத்துலட்சுமி கவனத்து வருகிறார். இது தொடர்பாக தகவல் வெளியானதை அடுத்து, சுப்பையாவின் வீட்டுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்களை கவனித்து வரும் முத்து லட்சுமியிடம் நிதியுதவியை வழங்கிய அவர், தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்