அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் - கிராமிய போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அதிமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் - கிராமிய போலீசார் விசாரணை
x
காரமேடு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் பஞ்சாட்சரம் என்பவருக்கும், கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த பைனான்சியர் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ராஜாவின் உறவினரும் திமுக ஊராட்சி செயலாளருமான ராஜேந்திரன், 20க்கும் மேற்பட்டோருடன் சென்று பஞ்சாட்சரமை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பஞ்சாட்சரம், ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கிராமிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்