குளறுபடிகளை நீக்கி உள்ளாட்சி தேர்தல் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் : துணைநிலை ஆளுநரிடம் நேரில் மனு

குளறுபடிகளை நீக்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று, அனைத்துக்கட்சியினர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
குளறுபடிகளை நீக்கி உள்ளாட்சி தேர்தல் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் : துணைநிலை ஆளுநரிடம் நேரில் மனு
x
புதுச்சேரியில் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி சட்டமன்ற கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், உள்ளாட்சி தேர்தல் குளறுபடி குறித்து,  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து,  சபாநாயகர் செல்வம் தலைமையில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து, தீர்மானத்தை மனுவாக வழங்கினர். தன்னிச்கையாகவும் சட்ட விதிகளுக்கு விரோதமாகவும் முடிவுகளை எடுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் புகார் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்