கடம்பூர் ராஜுவுக்கு எதிரான வழக்கு - காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்த வழக்கில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடம்பூர் ராஜுவுக்கு எதிரான வழக்கு - காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்த வழக்கில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கோவில்பட்டி தொகுதி பறக்கும் படை தலைவர் மாரிமுத்து தொடர்ந்த வழக்கை ரத்து செய்கோரியும், காவல்துறை விசாரணைக்கு தடை கோரியும், உயர்நீதிமன்றத்தில் கடம்பூர் ராஜுவும் வழக்கு 
தொடர்ந்தார்.

இதில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை என்றும், வாகனத்தை முழுமையாக சோதனை செய்ய ஒத்துழைத்ததாகவும், குறிப்பிட்டார். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்