சட்டமன்ற தேர்தல் தகராறு : அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

2011 சட்டமன்ற தேர்தல் தகராறு விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் தகராறு : அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
x
2011 சட்டமன்ற தேர்தல் தகராறு விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பணப்பாட்டுவாடா தொடர்பாக தகராறு ஏற்பட்டது.  இதில் தற்போதைய அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் அமைச்சர் சேகர்பாபு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி கொடுங்கையூர் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்