வார்டு மாறி வாக்காளர்கள் வாக்களிப்பு - சிவசைலம் ஊராட்சியில் மக்கள் புகார்

தென்காசி மாவட்டம், சிவசைலம் கிராம ஊராட்சியின் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் மறுதேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வார்டு மாறி வாக்காளர்கள் வாக்களிப்பு - சிவசைலம் ஊராட்சியில் மக்கள் புகார்
x
தென்காசி மாவட்டம், சிவசைலம் கிராம ஊராட்சியின் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் மறுதேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சியில் 2 மற்றும் 3 வார்டுகளுக்கு வாக்களிக்க பொதுவான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வார்டுக்கு உட்பட்ட 45 வாக்காளர்கள், 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மாறி வாக்களித்தாக புகார் எழுந்தது. 3 வது வார்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சிவசைலம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் நாளை மறுதேர்தல் நடத்தும்படி, தென்காசி மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்