பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க உத்தரவு

தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க உத்தரவு
x
தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை கோடிட்டு காட்டி தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படாத அளவிற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் பெட்டிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களையும் மாணவிகளுக்கு தெரியும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தனியார் பள்ளிகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா என்பதை நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்