ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
 மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கோவிந்தராஜ் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை திறக்க அனுமதிக்க கூடாது என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை,   கட்டிடத்தை திறக்க இடைக்கால தடை விதித்தும், இந்த வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க கோரி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்