பைக் மீது கார் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், தொழிலாளி பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ரபீக் என்பவர் இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பின்னனூர் பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரபீக் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story