கதர் உடைகளை உடுத்துவோம் - முதல்வர் ஸ்டாலின்

காந்தி பிறந்த நாளில் கதருடைகளை உடுத்துவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கதர் உடைகளை உடுத்துவோம் - முதல்வர் ஸ்டாலின்
x
காந்தி பிறந்த நாளில் கதருடைகளை உடுத்துவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அக்டோபர் 2 ஆம் தேதி,  காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம், நெசவாளர்களை உயர்த்துவோம் என கூறியுள்ளார். சிற்றூர்க் கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களையும், எளிய மக்கள் இன்மையாக நெய்தக் கதராடைகளையும், வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் வகையில் இளைஞர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாங்கி உடுத்திப் பெருமையடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்