சனிக்கிழமைகளில் கோயிலை திறக்க கோரி வழக்கு - தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோயில்களை திறக்க அனுமதி கோரிய வழக்கில், தமிழக தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சனிக்கிழமைகளில் கோயிலை திறக்க கோரி வழக்கு - தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
x
சாத்தூரை சேர்ந்த லோக்கைசாமி என்பவர் தொடர்ந்த பொதுநல மனு, நீதிபதிகள் துரைசுவாமி, முரளி சங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகம விதிப்படி கோயில்களின் உள்ளே அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக தலைமைச் செயலர், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்