பெற்ற மகளை அரிவாளால் வெட்டி விட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை -மகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சியில் பெற்ற மகளை அரிவாளால் வெட்டி விட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
x
திருச்சி அல்லித்துறை அடுத்து அதவத்தூர் அருகே, சக்திநகரை சேர்ந்த மூர்த்தி - லதா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வியாழக்கிழமை மாலை, மூர்த்தி, வீட்டிலிருந்த அவரது மகள் 27 வயதான கீர்த்தனாவை, பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டு,தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கீர்த்தனா, அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தகவல் அறிந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர், மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது ஆணவக்கொலை முயற்சியா?  அல்லது வேறு  காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போன்று மூர்த்தியின் மகனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்