அரிவாள் வாங்க ஆதார் கார்டு அவசியம்... நடைமுறையில் சாத்தியமா ?

அரிவாள் வாங்க ஆதார் கார்டு அவசியம் என பட்டறைகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ள நிலையில், நடைமுறையில் இது சாத்தியப்படுமா என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு
x
அரிவாள் வாங்க ஆதார் கார்டு அவசியம் என பட்டறைகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ள நிலையில், நடைமுறையில் இது சாத்தியப்படுமா என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு

அரிவாள் என்றதும் நம்மில் பலருக்கும் ஞாபகம் வருவது திருப்பாச்சேத்தி தான்... 
 
அரிவாளுக்கு மட்டுமின்றி விவசாய கருவிகளான மண்வெட்டி, கடப்பாறை உள்ளிட்டவையும் இங்கு செய்து கொடுக்கப்படுவது வழக்கம்... 

பரம்பரை பரம்பரையாக மன்னராட்சி காலத்தில் இருந்தே போருக்கு தேவையான ஆயுதங்கள் இங்கிருந்து தான் மொத்தமாக செய்து அனுப்பப்படுவது வழக்கம்

 அதுமட்டுமின்றி முக்கியமான கோயில்களுக்கு இங்கிருந்து தான் அரிவாள் செய்து அனுப்பப்படுகிறது...  கருப்பண்ணசாமி கோவிலுக்கு ராட்சஷ உயரம் கொண்ட அரிவாள் செய்து அனுப்பப்படுவதும் இங்கிருந்து தான்... 

 மிக கூர்மையாகவும்... அதிக திடமாகவும்... அதே நேரத்தில் மிகவும் எடை குறைவாக இருக்கும் அரிவாள்கள் என்பதால் இங்கு தயாரிக்கப்படும் அரிவாள்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு... 

ஏற்கனவே குற்றங்களுக்கு பயன்படுத்த கூடிய ஆயுதங்களை செய்து கொடுக்க கூடாது என காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில்,

 தற்போது பட்டறையில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என்றும், பொருட்கள் வாங்க வருபவர்களிடம் ஆதார் கார்டு மற்றும் முகவரி குறித்த விவரங்களை கேட்டு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

குடிசை தொழில் செய்து வரும் தாங்கள் இதனால் பெரிதளவில் பாதிக்கப்படுவோம் என்பது பட்டறையில் வேலை செய்பவர்களின் வேதனையாக உள்ளது. 

சாதாரண விவசாயியான நாங்கள் எதற்கு ஆதார் கார்டு கொடுத்து பொருள் வாங்க வேண்டும் என்று கேள்வி கேட்கின்றனர், விவசாயிகள்... 

ஆயுதங்களுடன் வலம் வந்து வீடியோ வெளியிடும் கும்பல் ஒருபுறம்... மறுபுறம் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள்... 
 
இவற்றால் அரிவாள் செய்வதை ஒரு கலையாக கருதும் தாங்கள் பாதிக்காத வண்ணம் அரசு  உத்தரவுகளை வெளியிட வேண்டும் என்பது பட்டறை உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்