ஊரக உள்ளாட்சித் தேர்தல் - "பூத் சிலிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்" - மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
x
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு உட்பட தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி முகாம் நிறைவடைந்துள்ளது.

* வாக்குப்பதிவு அன்று பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டு, கையேடுகள் அனைத்து அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்குப்பதிவு அன்று வாக்காளரை எளிதாக  அடையாளம் காண வழங்கப்படும் பூத் சிலிப் இல்லையென வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது என்றும், பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், வாக்காளர் பட்டியலில்  இடம்பெற்று வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு பொது தேர்தலில் அனுமதிப்பதை போல,14 மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்க அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையம், விரைவில் இதுகுறித்த சுற்றறிக்கையை வெளியிடவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்