அரசுப் பள்ளி ஆசிரியை மீது பேருந்து மோதி விபத்து - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை மீது பேருந்து மோதியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியை மீது பேருந்து மோதி விபத்து - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
x
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை மீது பேருந்து மோதியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கல்பாக்கத்தைச் சேர்ந்த மஞ்சுளா தேவி என்பவர், அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக, எம்ஜிஆர் சிலை பேருந்து நிறுத்தம் வந்த அவர், புறப்பட தயாராக இருந்த பேருந்தில் ஏற முன்பக்கமாக ஓடி வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக புறப்பட்ட பேருந்து, மஞ்சுளா தேவி மீது மோதியது. இதில் படுகாயமைடந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்