விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் சந்திரசேகர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
x
தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி, நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர  உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக  எஸ்.ஏ. சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2021 பிப்ரவரி 28ம்   தேதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், அதில் தாங்கள் உறுப்பினர்களாகவும் இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து, விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்