வெளிநாட்டினரை கண்காணிக்க வேண்டும் - நீதிமன்றம்

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டினரை கண்காணிக்க வேண்டும் - நீதிமன்றம்
x
தொழில், வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட  காரணங்களுக்காக இந்தியா வரும் வெளிநாடுகளைச்  சேர்ந்தவர்கள்  குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைகளில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை, திருச்சி, மதுரை,  உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 13 ஆயிரத்து 289 பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதை பதிவு செய்த நீதிபதி தண்டபாணி, பல வெளிநாட்டினர், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி குற்றச் செயல்களில்  ஈடுபடுவதாகவும்,  இது நாட்டின் பாதுகாப்புக்குகு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

விசா காலம் முடிந்த வெளிநாட்டினரை உடனடியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க  மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளதாகவும், அவற்றை மாநில அரசுகள் பின்பற்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார். விசா காலம் முடிவடைந்தும் இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் போலி ஆவணங்கள் மூலமாக இந்தியஅடையாள அட்டைகளை பெற்றுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.  எனவே வெளிநாட்டவர்களை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவில் தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்