ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள் - கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கு : தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற, அனுமதி கோரிய வழக்கை, ஒருவாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள் - கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கு : தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு
x
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் தாக்கல் செய்த மனுவில், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட கழிவுகளை வெளியேற்றவும், இயந்திரங்களை சரி செய்யவும், உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் அனுமதிக்க வில்லை என்றும்,
கழிவுகளை வெளியேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பனர்ஜி மற்றும் துரைச்சாமி, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கழிவுகள் மற்றும் மூலப்பொருட்களை அகற்ற அனுமதி அளிக்க இயலாது என, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து வேதாந்தா நிறுவனம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்