இரண்டு கிட்னிகள் செயலிழந்த சிறுமி - தைரியமாக இருக்குமாறு முதல்வர் ஆறுதல்

இரண்டு கிட்னிகள் செயலிழந்த சேலத்தை சேர்ந்த சிறுமியிடம் தொலைபேசி முதலமைச்சர் ஸ்டாலின், ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
x
இரண்டு கிட்னிகள் செயலிழந்த சேலத்தை சேர்ந்த சிறுமியிடம் தொலைபேசி முதலமைச்சர் ஸ்டாலின், ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் - ராஜநந்தினி தம்பதியின் 14 வயது மகள் ஜனனிக்கு , இரண்டு கிட்னிகள் செயலிழந்தாக கூறப்படுகிறது. பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால் சிகிச்சைக்கு உதவுமாறு, முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை சிறுமி வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தைரியமாக இருக்க வேண்டும் என சிறுமியிடம் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையில் இருந்து உடனே அழைப்பு வரும் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்