தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

சென்னையில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
x
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் தடுப்பூசி முகாம்கள் செயல்படும் விதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அவர், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தொடர்ந்து, புளியந்தோப்பு, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.  


Next Story

மேலும் செய்திகள்