தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி

புதுக்கோட்டை அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி
x
தெக்கூர் கிரமத்தை சேர்ந்த தியாகராஜன்  என்பவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் நடுரோட்டில் நின்றுள்ளது. இதனைத்தொடர்ந்து வாகனத்தில் பெட்ரோல் இருக்கிறதா என்பதை பார்ப்தற்காக பெட்ரோல் டெங்கை திறந்து அவர் தீக்குச்சியை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் தீ பிடித்து எரியத்தொடங்கியுள்ளது. தியாகராஜன் உடனடியாக அப்பகுதியில் இருந்து நகர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்