8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - சமையல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

மனவளச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - சமையல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
x
நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி விமல்ராஜ். கடந்த 2019 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்ததாக பண்ரூட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, விமல்ராஜ் மீதான பாலியல் தொல்லை குற்றத்துக்கு 20 ஆண்டு சிறையும், கொலைமிரட்டல் குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்