கல்லூரி மாணவி கொலையான சம்பவம் - கொலையாளிக்கு 15 நாட்கள் சிறை

சென்னையில் கல்லூரி மாணவி ஸ்வேதாவை கொலை செய்த ராமச்சந்திரனை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
கல்லூரி மாணவி கொலையான சம்பவம் - கொலையாளிக்கு 15 நாட்கள் சிறை
x
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வேதா நேற்று ராமச்சந்திரன் என்ற இளைஞரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரும் கத்தியால் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விசாரணைக்காக அவர் சேலையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் அக்டோபர் 8ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் அனுப்ரியா உத்தரவிட்டார்.




Next Story

மேலும் செய்திகள்