கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கு - காவல் ஆய்வாளர் வசந்தி ஜாமின் கோரி மனு
கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
மதுரையை சேர்ந்த காவல் ஆய்வாளர் வசந்தி ஜாமின் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் காவல்துறை ஆய்வாளராக உள்ளார் இது அவரை மட்டும் அல்லாமல் அவர் சார்ந்த துறையையும் களங்கப் படுத்தும் விதமாகவே உள்ளது என கருத்து தெரிவித்தார். மனுதாரர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் உள்ள ஆவணங்கள், மற்றும் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story