தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் : விபத்தில்லா தீபாவளி - அரசு உறுதி

தீபாவளி பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் : விபத்தில்லா தீபாவளி - அரசு உறுதி
x
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அத்துடன், தீபாவளி பண்டிகை நெருங்கி வருதவதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கி உள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி, சிறு குறு மற்றும் நடுத்தர பெரிய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் ஆபத்தில்லாத ரசாயனங்கள் பயன்படுத்துவதை, விருதுநகர் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வீதிமீறல் தொழில்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அக்டோபர் 15 ஆம் தேதிக்குள்அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்