தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகள் - தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு
தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், ஆண்டுக்கு 200 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கும் மத்திய அரசின் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழக அரசியல் தலைவர்கள் ஏற்க மறுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.இதன் காரணமாக பல ஏழை குழந்தைகள் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி கல்வியை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது அரசின் கொள்கை முடிவு என்றும், மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாகவும், தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
ஆகவே தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது அரசின் கொள்கை முடிவு என்றும், மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாகவும், தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story