உள்ளாட்சி தேர்தல் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணையில் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மொத்தமுள்ள 14 ஆயிரத்து 900 வாக்குச்சாவடிகளுக்கும் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும்,அனைத்து வாக்குச்சாவடிக்கும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், பிரதான எதிர்கட்சியான அதிமுக அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, செப்டம்பர் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.



Next Story

மேலும் செய்திகள்