மின்வேலியில் சிக்கி, கூலி தொழிலாளி மரணம் - உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
ஈரோடு மாவட்டம் தாளவாடியில், மரம் ஏறும் தொழிலாளி ஒருவர், மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில், மரம் ஏறும் தொழிலாளி ஒருவர், மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். கோபியை அடுத்த எலத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த துரையன் என்பவர், தாளவாடியில் தங்கி, கூலிக்கு தேங்காய் பறித்து வந்துள்ளார். சூசையபுரம் மனோகரனின் தோட்டத்துக்கு சென்ற அவர், காட்டுப்பன்றியை தடுக்கும் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கூலித் தொழிலாளி துரையன், மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.
Next Story