புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை
x
டி.டி.நகர் 2ஆம் வீதியில், வீடு எடுத்து டாஸ்மாக் கடை அமைக்க முயன்றுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர்,  இரண்டு முறை மனு அளித்துள்ளனர். அப்போது, கடை அமைக்க மாட்டோம் என டாஸ்மாக் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது. இதனிடையே, மீண்டும் டாஸ்மாக் திறக்க பணி நடப்பதாக கூறி, சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடை வராது என உறுதி அளித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்