ரிவால்டோ யானை விவகாரம் - வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து,வீடியோ பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிவால்டோ யானை விவகாரம் - வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானையை வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர்,  சமீபத்தில் அதனை காட்டில் விட்டனர். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த நிலையில், ரிவால்டோ யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, ரிவால்டோ யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு மற்றும் 200 லிட்டர் தண்ணீரை பருக வேண்டும்  எனவும் அதன் தும்பிக்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அதனால் சரியாக சாப்பிட முடியவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது காணொளி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்த தலைமை வன பாதுகாவலர்,ரிவால்டோ யானை காட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து விலங்குகள் காட்டில் தான் சிறப்பாக இருக்க முடியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து 8 வாரத்தில் வீடியோ பதிவை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்