கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
x
சென்னை அடுத்த குரோம்பேட்டை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இவர், இன்று கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென ஸ்வேதாவை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தானும் கத்தியால் தன்னை குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இருவரையும் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நாகையை சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற ராமு இதில் ஈடுபட்டது தெரியவந்தது. பொறியியல் பட்டதாரியான ராமச்சந்திரன், கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். மின்சார ரயிலில் வரும் போது ஸ்வேதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென ஸ்வேதா தன்னுடன் பேசாமல் போனதால் கோபமடைந்த அவர் இந்த விபரீதத்தில் ஈடுபட்டதும் உறுதியானது. பட்டப்பகலில் சென்னையில் நடந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்