"டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்" - ஓபிஎஸ்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும் - ஓபிஎஸ்
x
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஓரளவு கட்டுக்குள் இருக்கும் நேரத்தில், டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சாலைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பு நடவடிக்கைகளில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி, சுகாதார பணிகளை சிறப்பாக மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்