9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - வரும் 25ம் தேதி கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தகவல்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - வரும் 25ம் தேதி கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தகவல்
x
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்நிலையில், வரும் 25-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தை கமல்ஹாசன்  தொடங்க உள்ளதாக, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்