"நீட் தேர்வை எதிர்த்து போராட்டங்கள் தொடரும்" - கி.வீரமணி அறிவிப்பு

நீட் தேர்வு பாதிப்பு குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினரின் அறிக்கையை, சட்ட ரீதியாக நிராகரிக்க முடியாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.
x
நீட் தேர்வு பாதிப்பு குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினரின் அறிக்கையை, சட்ட ரீதியாக நிராகரிக்க முடியாது என திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி தெரிவித்து உள்ளார். சென்னை பெரியார் திடலில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில், திமுக தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்