கொடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தற்கொலை வழக்கு - தந்தையிடம் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை வழக்கில், அவரது தந்தையிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.'
x
கணினி ஆப்ரேட்டர்  தினேஷ் தற்கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதால் மறு விசாரணை செய்ய கோத்தகிரி தாசில்தாரிடம் சோலூர்மட்டம் போலீசார் நேற்று மனு அளித்தனர். இந்த நிலையில் கோத்தகிரி கெங்கரை கிராமத்தில் வைத்து  தினேஷின் தந்தை போஜனிடம் நேற்று இரவு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், தற்கொலைக்கான காரணம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்ததாக போஜன் கூறியுள்ளார். மேலும், கொடநாடு நிர்வாகம் எந்த மன அழுத்தத்தையும் தனது மகனுக்கு  கொடுக்கவில்லை என்று விசாரணையில் பதிவிட்டுள்ளதாகவும் தினேஷ் குமாரின் தந்தை  போஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்