தூக்கில் தொங்கிய உதவி மின்பொறியாளர் - அலுவலகத்திலேயே உயிரிழந்த சோகம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உதவி மின் பொறியாளர், அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி பி.எம்.டி. நகரைச் சேர்ந்த பொறியாளர் சின்னசாமி, சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில், ஓராண்டுக்கும் மேலாக உதவி மின் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். சின்னக்கட்டளை, சேடபட்டியில் மழையால் ஏற்பட்ட மின் தடைகளை, அந்தப் பகுதிகளுக்கு சக ஊழியர்களுடன் சென்று சரி செய்துள்ளார். நேற்றிரவு 12 மணி வரை பணி செய்த அவர், அலுவலகத்தில் தங்கியதாக கூறப்படுகிறது. காலையில் பணியாளர்கள் அலுவலகம் வந்தபோது, சின்னச்சாமி உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. தகவலின் பேரில் வந்த சேடப்பட்டி போலீசார், பொறியாளர் சின்னசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சின்னசாமிக்கு ஒரு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். பணிச் சுமையால் தற்கொலையா? கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story