துடையூர் ரயில்வே சுரங்கப் பாதை மூடல் - பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக மூடப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் துடையூரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் துடையூரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் துடையூரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது . இதனால் சிரமப்படும் பொது மக்கள் அந்த சுரங்கப்பாதையை மூட வேண்டும் என்று தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கியிருந்தது. அதை அறியாமல் காரில் சென்ற அரசு மருத்துவர் சத்யா மூச்சு திணறி உயிரிழந்தார். அவரது மாமியார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ரயில்வே சுரங்க பாதையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுரங்கபாதையை தற்காலிகமாக
மூட முடிவு செய்யப்பட்டது. மீண்டும் ரயில்வே கேட் திறக்கப்பட்டு ஆளில்லா ரயில்வே கேட் ஆக செயல்படவும் முடிவு செய்யப்பட்டது
Next Story