264 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
264 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி
x
திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். நாலுமாவடி பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோவையை சேர்ந்த சுடலைமணி என்பவர் ஓட்டி வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் 264 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருப்பது உறுதியான நிலையில் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சுடலைமணியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்