ஆற்றின் மையப்பகுதியில் சிக்கிய இளைஞர் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றின் நடுவில் சிக்கிய இளைஞரை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
ஆற்றின் மையப்பகுதியில் சிக்கிய இளைஞர் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
x
பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றின் நடுவில் சிக்கிய இளைஞரை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ஆழியார் அணை நிரம்பியுள்ளதால், 2 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர்  அம்பராம் பாளையம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவகத்தில் வேலை செய்யும் தொழிலாளி குமார் குளிப்பதற்காக ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆற்றில் நீர் திடீரென அதிகமாக வர ஆரம்பித்ததால், செய்வதறியாது, நடுவில் இருந்த பாறையின் மீது ஏறி நின்றுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றின் மையப்பகுதியில் இருந்த குமாரை, கயிற்றின் மூலம் நீந்திச் சென்று, கிட்டத்தட்ட 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்