விவசாயி ஓட ஓட வெட்டிக்கொலை - சொத்திற்காக கொலை அரங்கேறியதா..? என விசாரணை

கிருஷ்ணகிரி அருகே விவசாயி ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயி ஓட ஓட வெட்டிக்கொலை - சொத்திற்காக கொலை அரங்கேறியதா..? என விசாரணை
x
கிருஷ்ணகிரி அருகே விவசாயி ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பனப்பள்ளி அடுத்த சிலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடப்பன் என்பவரது மகன் முருகன் என்பவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் ஓராண்டிற்கு முன்னர் கொரோனாவால் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும், தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜமுனா புகார் அளித்திருந்தார். அதன்பின்னர் 3 மாதத்தில் ஜமுனாவும், அவரின் இரு குழந்தைகளும் விபத்து ஒன்றில் மரணமடைந்தனர். இது நடந்து ஓராண்டு ஆன நிலையில் முருகனின் தந்தையான வெங்கடப்பன் மட்டுமே இருந்துள்ளார். இந்த நிலையில் அவரும் இன்று அடையாளம் தெரியாத 5 பேரால் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்திற்காக கொலை அரங்கேற்றப்பட்டதா அல்லது வேறு எதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்