கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை கொள்ளையடித்தனர்.
வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை கொள்ளையடித்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 4 மீனவர்கள் கோடியக்கரை கடற்கரைக்கு கிழக்கே மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் சுமார் 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, 5 படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவி, வாக்கிடாக்கி, செல்போன் டார்ச்லைட் , சிக்னல்லைட் உள்ளிட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்து 4 மீனவர்களையும் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story