கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை கொள்ளையடித்தனர்.
கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
x
வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை கொள்ளையடித்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 4 மீனவர்கள் கோடியக்கரை கடற்கரைக்கு கிழக்கே மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் சுமார் 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, 5 படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், படகில் இருந்த  ஜி.பி.எஸ் கருவி,  வாக்கிடாக்கி,  செல்போன் டார்ச்லைட் , சிக்னல்லைட்   உள்ளிட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்து 4 மீனவர்களையும் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்