"பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல்

கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
x
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஒசூர் என கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், 8 அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், வேலூரில் உள்ள கே.சி.வீரமணியின் வீட்டில் ஆவணங்கள் மற்றும் நகைகள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில், சோதனையில் கணக்கில் வராத பணம், தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். கலசப்பாக்கத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீட்டில் இருந்து ஹார்டு டிஸ்க், பென்டிரைவ், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்