வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - 16 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
திருப்பத்தூரில் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பத்தூரில் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பசிலிகுட்டை பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் விஷ்ணு, தமது நண்பருடன் அணேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஓசூரிலிருந்து வந்த டிராவல்ஸ் வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே விஷ்ணு உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 15க்கு மேற்பட்டோர் தற்போது மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story