3 வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய அணை - 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
x
பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.  நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 120 அடி கொள்ளளவு கொண்ட  அணை மீண்டும் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது.  பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆனைமலை ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்