ரூ.6 கோடி மதிப்பு சோலார் பேனல்கள் பறிமுதல் - ரூ.50 லட்சம் வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி மும்பையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட, 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
கருப்பாயூரணி சுற்று வட்ட சாலையில்,  சந்தேகிக்கும் வகையில் வந்த கண்டெய்னர் லாரியை, மதுரை வணிக வரித்துறை இணை ஆணையர் இந்திரா தலைமையிலான குழு, சோதனை செய்தனர். அப்போது  அதில், சோலார் பேனல்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 6 கோடி ரூபாய் என்றும்,
தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய காவல்துறை  பாதுகாப்புடன் மாட்டுதாவனி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். காவல்துறை நடத்திய விசாரணை  மும்பையில் உள்ள  நிறுவனத்திலிருந்து,  நெல்லை மானூரில் செயல்படும் தனியார் கம்பெனிக்கு, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது.  இதன் மூலம் 50 லட்சம் ரூபாய் வரி எய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் முன்னதாக வரி ஏய்ப்பு செய்துள்ளதா என்ற கோணத்தில், வணிக வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்