வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை சம்பவம் - முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் சரண்

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை சம்பவம் - முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் சரண்
x
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம், கடந்த  10 ம் தேதி  அவரது சொந்த ஊரான வாணியம்பாடியில்  மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, டீல் இம்தியாஸ் என்பவர் கூலிப்படையை ஏவி வசீம் அக்ரமை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரவீன் குமார், அஜய் உள்ளிட்ட6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இந்நிலையில் வழக்கில் தேடப்பட்ட வந்த முக்கியக் குற்றவாளியான டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரண் அடைத்துள்ளார். அப்போது 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து  ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில்  டீல் இம்தியாஸ் அடைக்கப்பட்டார்



Next Story

மேலும் செய்திகள்