கொலை முயற்சி வழக்கு - இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை

பல்கலைகழக மாணவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொலை முயற்சி வழக்கு - இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை
x
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது மாணவி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விவசாயக்கல்லுாரியில் 2018 ஆம் ஆண்டு எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்தார். இந்த நிலையில், பள்ளி பருவம் முதலே அவரை காதலித்து வந்த இன்ஜினியர் நவீன்குமார்  என்பவரால் மாணவி கடுமையாக வெட்டப்பட்டார். அதில் மாணவி உயிர் பிழைத்த நிலையில், இது தொடர்பான வழக்கு கடலுார் மாவட்ட மகளிர்  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், மாணவியை கொலை செய்ய முயன்ற நவீன்குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.




Next Story

மேலும் செய்திகள்